ஆலங்குளத்தில் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி.
ஆலங்குளத்தில் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் இவரது இளைய மகன் செண்பக மாலினி (வயது 6). ஆலங்குளம் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகின்றார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிகிழமை வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.நேற்று மாலையில் இருந்து மிகவும் சோர்வாக காணப்பட்ட செண்பக மாலினிக்கு நள்ளிரவு 1 மணிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் சிறுமி இறந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து சிறுமி உடல் ஆலங்குளம் போலீசாரால் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவிற்கு பின்பே சிறுமி இறந்ததது என்ன காய்ச்சல் என்ற விபரம் தெரிய வரும். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :