தேர்தல் ஆணையம் முறையாக நடந்தால் ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்-அமைச்சர் எஸ் எஸ்.பி.வேலுமணி

by Staff / 13-02-2023 02:19:01pm
தேர்தல் ஆணையம் முறையாக நடந்தால் ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்-அமைச்சர் எஸ் எஸ்.பி.வேலுமணி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். இதை பார்க்கும் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. ஈரோடு மாவட்டத்திற்கு அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.

கடந்த 21 மாத ஆட்சியில் திமுக அரசு சொல்லக் கூடிய வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணத்தை மட்டும் நம்பி இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்.  அது நடக்காது என்று கூறினார்.பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட உரிமை தொகை இதுவரை தரவில்லை. இதேபோல் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. சொத்து வரி, பால் விலை உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த தேர்தலில் விதிகளை மீறி திமுக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தகுதிநீக்கம் செய்யப்படுவார். இந்த தேர்தல் வெற்றி என்பது, வரும்  நாடாளுமன்ற தேர்தல் மட்டுமன்றி, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அமோகமாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். அதற்கு இந்த இடைத்தேர்தல் அடித்தளமாக இருக்கும் என்று கூறினார்.

 

Tags :

Share via