மீண்டும் இணைந்த அஇஅதிமுக கூட்டணி - பிரதமர் மகிழ்ச்சி பதிவு.

by Editor / 12-04-2025 11:10:19am
மீண்டும் இணைந்த  அஇஅதிமுக கூட்டணி - பிரதமர் மகிழ்ச்சி பதிவு.

வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும்  ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். 

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும். என பிரதமர் மோடி தனது X தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

 

Tags : மீண்டும் இணைந்த கூட்டணி - பிரதமர் மகிழ்ச்சி பதிவு.

Share via