ட்ரோன் கேமிரா பறக்கத்தடை
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் 18 மற்றும் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.வரும் 18ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்படும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு காலை 12 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி ஏற்கனவே தடை உள்ள நிலையில் மாநகர் பகுதியிலும் அனுமதி இல்லாமல் ட்ரோன் பறக்கத்தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
Tags :