பெண் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 18-12-2022 03:54:47pm
பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் திருநகர் காலனியை சேர்ந்தவர் 45 வயதான கணேசன் கூலி தொழிலாளி. இவரது மனைவி 39 வயதான சொப்னா. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொப்னாவின் தந்தை இறந்து விட்டார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via