கொடைக்கானலில் கஞ்சா போதை காளான் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது

by Staff / 15-02-2023 05:43:36pm
கொடைக்கானலில் கஞ்சா போதை காளான் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்கப்படுவதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  இதில், கொடைக்கானல் நாயுடுபுரத்தை அடுத்த பாக்கியபுரம் பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி ஜெனிபர் (23), அந்தோணி ராகுல் (20) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அல்ஹாத் (35) ஆகிய மூவரும் சேர்ந்து கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, போலீசார் ஜெனிபர் வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக சோதனை நடத்தினர்.  இதில், விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும்,  நூறு கிராம் போதை காளானையும் கைப்பற்றினர்.  இதுபற்றி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வேளாங்கண்ணி ஜெனிபர், அவருக்கு உடந்தையாக இருந்த அந்தோணி ராகுல், அல்ஹாத் ஆகியோரை கைது செய்தனர்.

 

Tags :

Share via