கல்லூரி மாணவியை  பலாத்காரம் செய்ய முயற்சி செய்த லாரி டிரைவர் கைது

by Editor / 07-05-2023 08:34:08am
கல்லூரி மாணவியை  பலாத்காரம் செய்ய முயற்சி செய்த லாரி டிரைவர் கைது


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேல கடையநல்லூரை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி இவர் புளியங்குடியில் உள்ள  நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தற்போது கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வருகிறார் தினந்தோறும் கடையநல்லூரில் இருந்து மேல கடையநல்லூருக்கு நடந்து செல்வது வழக்கம்  நேற்று 6 ஆம் தேதி இரவு  அட்டக்குளம் அருகே சாலையில்  நடந்து  வீட்டிற்கு   சென்ற பொழுது அட்டை குளம் அருகே மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் லாரியில் இருந்து இறங்கிய சேலத்தைச் சேர்ந்த டிரைவர்  சரவணகுமார் என்பவர்  திடீரென சாலையில் சென்ற மாணவியின் கையைப் பிடித்து கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார் இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார்.  

அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து சரவணகுமாருக்கு தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டனர் அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் சரவணகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் மக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் அட்டை குளம் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் இங்கே எந்த வாகனங்களை நிறுத்தக்கூடாது என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

 

Tags :

Share via