மாணவி தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 03-11-2022 05:14:41pm
 மாணவி தூக்கு போட்டு தற்கொலை


மேட்டுப்பாளையம் பங்களமேடு மாசாணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருள்நாதன். இவரது மகள் கவுசல்யா (வயது 21). இவர் கோவை டி. வி. எஸ் நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து அழகு கலை பயின்று வந்தார்.

இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்யோர் பள்ளி படிப்பை முடித்து என்ஜினீயரிங் படிக்குமாறு கூறி வந்தனர். ஆனால் அவர் அழகு கலையில் அதிக ஆர்வத்துடன் இருந்து வந்தார். இதனால் கவுசல்யா என்ஜினீயரிங் படிக்காமல் அழகு கலையை படித்து வந்தார்.இதனால் அவரது பெற்யோர் கவுசல்யா மீது கோபம் அடைந்து அவருடன் சரியாக பேசாமல் இருந்து வந்தனர்.

இதனை நினைத்து அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via