பெண் துாக்கிட்டு தற்கொலை

by Staff / 18-11-2023 04:33:22pm
பெண்  துாக்கிட்டு தற்கொலை

சென்னை பெரவள்ளூர், ஜி. கே. எம். , காலனியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி மீனா. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 15 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டவர், மருத்துவமனையில் 8 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். பின், ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் மீனா துாக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடலை மீட்டு, பெரவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் மீனா இறந்தது தெரிய வந்தது. பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via