கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி 30 பிபி 2 தூக்க மாத்திரைகளை உட்கொண்டார் - அரசு மருத்துவமனையில் அனுமதி
இன்று அதிகாலை, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி எண்ணூர் தனசேகரன், சிறைச்சாலை மருத்துவ அதிகாரியால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 30 BP மாத்திரைகள் மற்றும் 2 தூக்க மாத்திரைகளை அவர் உட்கொண்டதாக சிறைச்சாலை ஊழியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் கடலூர் ஜி.எச்.க்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேலூர் சிறைத் துறை டிஐஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :
















.jpg)


