விடுதியில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித் தொழிலாளி. இவரது மகள் தாரணி (வயது18). இவர் பூந்தமல்லி அருகே புதுசத்திரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு வெகு நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளவேடு போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :