உயிர்களை காப்பாற்ற போராடும் பெண்
உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் சமீபத்தில் விபத்தில் அவருடைய தந்தையை இழந்தார். இதையடுத்து மற்றவர்களை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என்று நினைத்த அவர், அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். இரவில் பனிமூட்டம் அதிகம் இருப்பதால் சைக்கிளில் செல்வோர் கண்களுக்கு தெரிவதில்லை. இதனால் கார்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதையடுத்து அதை தடுக்கும் வகையில் சைக்கிள்களில் வண்ண மின்விளக்குகளை அவர் இலவசமாக பொருத்தி வருகிறார். மேலும் கார்களில் குழந்தைகள் இருந்தால் அது குறித்த எச்சரிக்கை வாசகங்களையும் ஒட்டுகிறார்.
Tags :