ரெயில் மோதி லாரி டிரைவர் பலி

by Staff / 25-02-2023 05:12:30pm
ரெயில் மோதி லாரி டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் விஜய் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. நேற்று இரவு விஜய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆயிபாளையம் ரெயில்வே பாதையை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு வெண்ணந்தூர் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

 

Tags :

Share via