முதியோர் இல்லத்தில் மூதாட்டி விஷமருந்தி தற்கொலை

by Staff / 26-02-2023 01:53:11pm
முதியோர் இல்லத்தில் மூதாட்டி விஷமருந்தி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேக்காமண்டபம் பகுதியில் உள்ள தனியார் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் மரியா என்கின்ற மூதாட்டியும் வசித்து வந்தார். அவர் திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன வருத்தத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்து.

 

Tags :

Share via