டாஸ்மாக் ஊழியரை வெட்டி 8 லட்சத்து 45 ஆயிரம் கொள்ளை.

by Editor / 07-03-2023 03:49:55pm
டாஸ்மாக் ஊழியரை வெட்டி 8 லட்சத்து 45 ஆயிரம் கொள்ளை.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வீதிவிடங்கன் அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் தெட்சிணாமூர்த்தி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு நாள் டாஸ்மாக் கடை வசூலான 8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை நன்னிலத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து வந்துள்ளார்.அப்போது ஸ்ரீவாஞ்சியம் அருகே இரண்டு பேர் முகமூடி அணிந்து வந்து அரிவாளால் தட்சிணாமூர்த்திய வெட்டி 8 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தட்சிணாமூர்த்தி நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் டாஸ்மாரக் ஊழியர் தட்சிணாமூர்த்தி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்தும் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதியில் உள்ள 13 அரசு மதுபான கடைகளை  அடைத்து மதுபான கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via