இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது-தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக அறிவிக்க வெளியிட்டுள்ளார். அறிக்கையில், டிட்வா புயல் காரணமாக ,நமது அண்டை நாடான இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது .நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி .இலங்கை மக்கள் அவதி யுறுகின்றனர். இந்த இயற்கை சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு.. இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.
இலங்கையில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க ஆயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு ,இன்று காலை 11:05 மணி அளவில் முதற்கட்டமாக 177 பேர் [ ஆண்கள் 113 பேர் பெண்கள் 60 பேர் குழந்தைகள் நாலு ] என தமிழ்நாட்டில் திரும்ப அழைத்து வரப்பட்டு உள்ளனர் .டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு, ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள்ஆகியவற்றைத் தந்து அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்ட தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திட தலைமை செயலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















