பெண் தற்கொலை.

அருமனை அருகே உள்ள பினாக்காலவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் செல்வ ராஜ், லாரி டிரைவர். இவருடைய மனைவி ஷீபா (வயது 44). இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். நேற்று காலை செல்வராஜ் தனது சகோதரியுடன் வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் அவரது மகன் கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தாயார் ஷீபா, மின் விசிறியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஷீபாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷீபா அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அதனால் ஏற்பட்ட மன வேதனையில் அவர் தற்கொலை செய்திருக்கலாமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :