12 காவல் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு காவலர்கள் மாற்றம்

by Editor / 08-03-2023 09:27:37pm
 12 காவல் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு   காவலர்கள் மாற்றம்

திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பிரிவு காவலர்கள் மாற்றம் திருவாரூர் எஸ்பி அதிரடி நடவடிக்கை.காவல் நிலையங்களின் செயல்பாடுகளையும் காவல் நிலைய எல்லைகளில் நடைபெறும் குற்ற செயல்கள் பிரச்சனை எழக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுப்பதற்காக தனி பிரிவு காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.இந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தனிப்பிரிவு காவலர்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும் ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக தனி பிரிவு காவலர்கள் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் திருவாரூர் நன்னிலம் கொரடாச்சேரி வைப்பூர் உள்ளிட்ட 12 காவல் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு காவலர்களை மாற்றம் செய்து திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via