ஆன்லைன் சூதாட்ட மசோதா:தமிழக அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும்-அண்ணாமலை

by Editor / 09-03-2023 10:01:45am
ஆன்லைன் சூதாட்ட மசோதா:தமிழக அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும்-அண்ணாமலை

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் வரவேற்று உள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக தனியாக கடிதம் எழுதி உள்ளது. டெல்லி மதுபான ஊழல் போல் தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு வந்து விடும் என மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். இதனால் கடிதம் எழுதி உள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக அமர்ந்து பேசி ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.

இதையும் படிக்கவும்: “திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்” – அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான பணிகளை செய்வது தான் எனது பணி. அதிமுகவினர் என் மீது புகார் கூறினாலும் கவலைப்பட மாட்டேன். கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள். மேஜேனர்கள் அல்ல. தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனது பணியும் தலைவராக தான் இருக்கும்.

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் ஏன் திரும்பி அனுப்பினார் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது தேர்வு எழுதினால் அந்த விடை தாளை பணம் கட்டி நகலை பெறுவோம். ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்ற கடிதத்துடன் வெளியிட வேண்டும்.

சட்டமன்றத்தில் மீண்டும் கூடி சட்டத்துக்குட்பட்டு மசோதாவை அனுப்ப வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஆளுநர் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் அறிவுறுத்தியது போல் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

Tags : :தமிழக அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும்-அண்ணாமலை

Share via