கோவிலை இடிக்க எதிர்ப்பு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

by Staff / 01-12-2022 01:53:37pm
கோவிலை இடிக்க எதிர்ப்பு   பெண்கள் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, மணிநகரம் பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. 200 க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த சந்தன மாரியம்மன் கோவில் நடைப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என அப்பகுதியை சேர்ந்த அசோகன் என்பவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் இன்று அங்கு போலீசார் குவிந்து வந்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கூடிய பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் மாற்றிவிட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை விலக்கிய போலீசார், கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டத்தை கலைத்து, அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

 

Tags :

Share via