பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை...

by Admin / 12-08-2021 12:05:35pm
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை...

ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவின், 75வது சுதந்திர தின விழா வரும் ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத செயலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய எல்லைப் பகுதியான ரஜவுரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி., தில்பக் சிங் ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via