கஞ்சா விற்ற வாலிபா் கைது

by Staff / 10-03-2023 02:22:29pm
 கஞ்சா விற்ற வாலிபா் கைது

கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தூளிபட்டி பகுதியில் ஒரு இடத்தில் கஞ்சா வைத்து விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காந்தி கிராமத்தை சேர்ந்த அறிவானந்தம் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via