பத்தினம் திட்டையில் கார் பஸ் மோதல் 20 பேர் படுகாயம்
கேரள மாநிலம் பத்தினம் திட்டையில் திருவனந்தபுரத்திலிருந்து வந்த கே எஸ் ஆர் டி சி பேருந்து மீது திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஸ்கார்பியோ கார் ஒன்று கொலவள்ளூர் ஆர்த்தோ டாக்ஸ் சர்ச் அருகே விபத்துக்கு உள்ளானது. இதில் ஸ்கார்பியோ கார் பேருந்து மீது மோதியதில் பேருந்து ஓட்டுனர் விபத்தை தடுப்பதற்காக சாலையின் ஓரத்தில் திருப்பிய பொழுது சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளிவாசல் உடைய நுழைவுப் பகுதிதடுப்பு சுவரில் பேருந்து மோதியது. இதில் பள்ளிவாசலின் நுழைவுப் பகுதியில் இருந்து ஆர்ச் பேருந்தில் மீது இடிந்து விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் முன்னிருக்கையில் இருந்த சைலஜா என்ற பெண், பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 18 பேர் காயம் அடைந்தனர். இரண்டு நபர்கள் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கும் மீதி 16 நபர்கள் பத்தினம் திட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டனர்.மேலும் ஸ்கார்பியோ கார் ஓட்டுநரின் இரண்டு கால்களும் முறிவு ஏற்பட்டது, மேலும் அவருடன் இருந்த மற்றொரு நபருக்கு கைமுறிவும் ஏற்பட்டுள்ளது.ஒரு நிமிட நேரத்தில் நடந்த இந்த கொடூர விபத்தில் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பவர் மனதை பாதை..பதைக்க வைக்கும் இந்த சம்பவம் கேரள மாநிலத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள
Tags :