சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அலறி ஓடிய மக்கள்

by Staff / 14-03-2023 12:35:09pm
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அலறி ஓடிய மக்கள்

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. அந்நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சேதம் மற்றும் உயிர் பலி குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 50 ஆயிரம் உயிர்களை பலி வாங்கியது. சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கம் பதிவாகிவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via