மின்விசிறியில் தூக்கு மாட்டி உயிரிழந்த இளைஞர்

by Staff / 15-03-2023 05:24:42pm
மின்விசிறியில் தூக்கு மாட்டி உயிரிழந்த இளைஞர்

கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகர் சிதம்பரனார் தெருவில் தனது சித்தி வீட்டில் தங்கி வசித்து வந்தவர பழனியாண்டி மகன் சிவக்குமார் (29). இவரின் பெற்றோர் 8 வருடம் முன்பு இறந்து விட்டதால் தனது சித்தி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அதன்பிறகு பெங்களூரில் தனியார் கம்பெனியில் 6 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி அன்று தனது சித்தி வீட்டிற்கு வந்துள்ளார். சிவக்குமாருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துவந்ததாகவும், அதற்கு சிவக்குமார் திருமணம் வேண்டாம் என கூறியும் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சிவக்குமார் தூங்கச் சென்றுள்ளார். அதன் பிறகு இன்று அதிகாலை வீட்டில் பார்த்த போது மின்விசிறியில் கயிறு கட்டி தூக்கு மாட்டி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இது குறித்து குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து சிவக்குமாரின் சித்தி மகன் நிவாஸ் குமார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via