முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 2,500 பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு.

by Editor / 16-03-2023 08:12:40am
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 2,500 பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் மதுரை விமான நிலையம் வந்தபோது அமமுக நிர்வாகிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அதிமுக நிர்வாகிகள் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக ராஜேஸ்வரன் அளித்த புகாரில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து பழங்காநத்தத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட 2,500 பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via