தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்

by Staff / 16-10-2024 04:06:41pm
தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி தீபாவளி சீட்டு பிடித்து வந்த ரூ.3 லட்சம் பணத்தை தனது தந்தை லோகநாதனுக்கு (60) கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து, பல மாதங்களாகியும் தந்தை பணத்தை திருப்பி தராததால் இருவருக்கும் இடையே தகராறு பெரிதாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். அதன்பின் கார்த்திக் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 

Tags :

Share via