கடல் சீற்றம் -மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 16-03-2023 09:27:30am
கடல் சீற்றம் -மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் கடல் சீற்றத்துடன் கடலரிப்பும் ஏற்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது. தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும்  நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via