கணவர் இறந்த நேரத்தில் மனைவின் உயிர் பிரிந்தது. இருவரும் மரணம் செங்கோட்டை பகுதியில் சோகம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காமராஜ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரை என்ற மாயாண்டி(58) இவர் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நேற்று நள்ளிரவில் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நள்ளிரவு ஒரு மணி அளவில் துரையை அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு செல்லும் வழியில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்ததாக கூறப்ப்டுகிறது. இந்த தகவல் அவரது மனைவி கல்யாணிக்கு(50) தெரியப்படுத்தவே அவரும் வீட்டில் மயங்கி விழுந்து உள்ளார் உடனடியாக அவரையும் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவிக்கவே உடனடியாக அவரையும் வீட்டுக்கு தூக்கி வந்தனர். ஒரே குடும்பத்தில் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு சங்கர் என்கின்ற திருமணம் ஆகாத மகன் ஒருவர் உள்ளார்.
Tags :