ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு

by Staff / 27-05-2024 11:40:17am
ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த இடைக்கால ஜாமின் உத்தரவில் சில நிபந்தனைகளும் விதித்தது. இந்த நிலையில் தற்போது இன்று (மே 27) தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றட்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via