நெல்லையில் மகளுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டு தானும் குடித்து தாய் தற்கொலை

by Staff / 19-04-2022 12:31:32pm
நெல்லையில் மகளுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டு தானும் குடித்து தாய் தற்கொலை

நெல்லையில் 10 வயதான மூத்த மகள் விஷத்தை தட்டிவிட்டு அக்கம்பக்கத்தினர் அழைத்து வருவதற்குள் இளைய மகளுக்கு அதனை கொடுத்து தானும் குடித்து உயிர் இழந்தார். நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மனைவி சுமதி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் தனது இளைய மகளுக்கு விஷத்தை கொடுத்து சுமதி தானும் விஷம் குடித்துள்ளார்.விஷம்  கொடுத்து சமயத்தில் மூத்த மகள் அதனை தட்டிவிட்டு அக்கம்பக்கத்தினர் அழைத்து வந்தார் இதனை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை இருவரும் உயிரிழந்தனர். ஆறு மாதங்களுக்கு முன் நெல்லைக்கு பணிமாறுதல் ஆக வந்த சுமதி தனது தாய் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுள்ளார் .இந்த நிலையில் மாடசாமி தனது சொந்த ஊருக்கு அழைத்த  நிலையில் சுமதி மறுத்ததாக கூறப்படுகிறது மேலும் இறந்த தனது அண்ணனின் குடும்பத்திற்கு மாடசாமி பணம் கொடுப்பது தொடர்பாகஏற்பட்ட தகராறில் அவர் சுமதியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via