வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி உள்ளது.. வங்கதேசத்தின் உள்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டங்களை வன்முறையாக ஒடுக்கியதில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது... ஏற்கனவே அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
Tags :


















