லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

by Staff / 22-03-2023 11:26:53am
லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

ராமநாதபுரம்: ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தில் சமூக நலத்துறை அலுவலகம் உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு தங்கச்சிமடத்தை சேர்ந்த பெண் ஒருவர் மகளின் திருமணத்திற்காக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தினை அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்க அலுவலர் பிரேமா ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அப்பெண் அவ்வளவு பணம் இல்லை என அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார். அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், இரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பெண்ணிடம் விரிவாக்க அலுவலர் பிரேமா பெறும் போது பிடித்தனர்.

 

Tags :

Share via