கோர விபத்தில் உருக்குலைந்த கார்கள்: 3 பேர் பலி

by Staff / 22-03-2023 11:40:41am
கோர விபத்தில் உருக்குலைந்த கார்கள்: 3 பேர் பலி


புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). தாயார் வெள்ளையம்மாள் (48), மனைவி நீலவேணி (25), அக்காள் மகள் மகிஷாஸ்ரீ (12), மாமியார் சுமதி (45) ஆகியோருடன் சேலத்தில் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்றார். காரை கதிர் (28) என்பவர் ஓட்டிச் சென்றார். இதேபோல் சேலம் நோக்கி 6 பேர் காரில் சென்றனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நேற்றிரவு 2 கார்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் 12 பேர் படுகாயமடைந்தனர். அனைவரையும் திருச்சி மீட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி கதிர், சுமதி, மகிஷாஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

 

Tags :

Share via

More stories