போலீசாரால் துன்புறுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

by Editor / 05-02-2022 06:02:29pm
போலீசாரால் துன்புறுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

வீட்டை காலி செய்வது தொடர்பான பிரச்சனையில் போலீசாரால் துன்புறுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அப்பாவிகள் மேல் காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1982ல் நடந்த பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற வழக்கை 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நல்லகாமன் இறந்ததால் மகன் சுந்தரபாண்டியன் மதுரை கிளையில் தொடர்ந்த மனுவில் ஆணையிடப்பட்டது.

 

Tags : Rs 2 lakh compensation to the family of a retired soldier who was harassed by the police

Share via