இன்று முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர்சிபி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு முதல் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இன்று காலை ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரபல தொழிலதிபர்களுடன் 45 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். அம்மாநிலத்திற்கு இந்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
Tags :