வெடி விபத்து - ஈபிஎஸ் இரங்கல்

by Staff / 22-03-2023 03:21:37pm
வெடி விபத்து - ஈபிஎஸ் இரங்கல்

காஞ்சிபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில் அவர், வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும், மரணமடைந்தவர்களுக்கு குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

 

Tags :

Share via