சிறுமி பாலியல் பலாத்காரம்- சிறுவன் உட்பட 3 பேர் கைது

by Staff / 22-03-2023 04:17:29pm
சிறுமி பாலியல் பலாத்காரம்- சிறுவன் உட்பட 3 பேர்  கைது

கோவையை சேர்ந்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி, இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார், சிறுமியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது, இவரது தந்தை மது போதைக்கு அடிமையானவர், சிறுமியின் வீட்டின் அருகே திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார், கடந்த 20-ந்தேதி அவர் சிறுமியிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார், அப்போது சிறுமி, தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிவித்தார், இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திருநங்கை, உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தார், அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், இதனை தொடர்ந்து நேற்று மகளீர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது, இதுகுறித்து பேருல் அனைத்து மகளீர் காவல்துறையினர் கூறியதாவது, சிறுமியின் வீட்டின் அருகே 27 வயதான மதன் என்பவர் வசித்து வருகிறார், இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார், கடந்த மாதம் 12-ந் தேதி மதன் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், மேலும் இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி விடுத்துள்ளார், இதனால் சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார், இந்த நிலையில் சிறுமிக்கு வீட்டின் அருகே வசிக்கும் 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, சிறுவனும் கடந்த 15-ந்தேதி சிறுமியை அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், மேலும் சிறுமியின் தந்தையின் நண்பரான சதாசிவம், என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், இதையடுத்து போலீசார் 15 வயது சிறுவன், மதன், சதாசிவம் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவர்களை கைது செய்தனர், பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 2 பேரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via