3 மாத கள்ளக்காதல் காரணமாக கணவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி.

by Editor / 27-03-2023 08:52:32am
 3 மாத கள்ளக்காதல் காரணமாக கணவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி.

மதுராந்தகம் அருகே பவுஞ்சூர் அடுத்துள்ளது நெல்வாய் பாளையம். இங்கு விவேக் என்பவர் தனது மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார் இவர் கூலி தொழிலாளி. அதே தெருவில் ஏகாம்பரம் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கும் திருமணமாகி திருமண வயதில் ஒரு பெண் பிள்ளை உள்ளது. கடந்த சில மாதங்களாக ஏகாம்பரத்திற்கும் ஜெகதீஸ்வரிக்கும் திருமணத்தை தாண்டிய முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை விவேக் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். கணவனின் மரணம் குறித்து ஊருக்குத் தெரிவித்த ஜெகதீஸ்வரி அழுது புலம்பியுள்ளார்.  வீட்டுக்கு வந்த விவேகம் உறவினர்கள் கழுத்தில் தழும்பு போன்று இருப்பதைக் கண்ட உறவினர்கள்  அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விவேக் வீட்டுக்கு சென்ற அணைக்கட்டு போலீசார் விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விவேக்கில் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜெகதீஸ்வரி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் முறையற்ற தொடர்பால் தனது கணவனை ஜெகதீஸ்வியே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து  ஜெகதீஸ்வியையும் ஏகாம்பரத்தையும் அணைக்கட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்

 

Tags :

Share via