இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையே கல் வீச்சு
நாம் மதச்சார்பற்ற நாட்டில் இருக்கிறோம் என்று வாய்மொழியாக கூறிக்கொண்டாலும், சில இடங்களில் மதங்களுக்கு இடையே எப்போதும் முரண்பாடுகள் உள்ளன. அப்படி ஒரு தாக்குதல் வீடியோ வைரலாகி வருகிறது. சில இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஜம்வரங்காத் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாரால் கூட அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசார் சம்பவ இடத்தில் இருப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பி, ஆக்கிரோஷமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :