ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

by Staff / 28-03-2023 03:55:39pm
ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

பீகாரில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சேலம் வந்தது. அப்போது ரெயில்வே போலீசார் ரெயிலில் ஏறி சோதனை நடத்தி னர். அதில் பொதுப்பெட்டியில் இருந்த ஒருவரை சந்தே கத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம் புரு பாண்டே (வயது 35) என்பதும், திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் அவர் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது. அவர் டிக்கெட் எடுக் காமல் பயணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை ரெயில்வே போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via