விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Editor / 19-06-2025 03:35:54pm
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் நடத்திய சோதனையில் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வாரத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via