கல்லூரியில் மயங்கி விழுந்த மாணவி மரணம் போலீஸ் விசாரணை
மதுரை விஸ்வநாதபுரம் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் அக்ஷயா(19) இவர் தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியில் இருந்த மாணவி அக்ஷயா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக மாணவிகள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :