4வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
கோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர், 47 வயதான தமிழ் திருமுருகன், இவரது மகன் 19 வயதான சஞ்சய் பவன், இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரியில், கணினி நெட்வொர்க்கிங் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார், மேலும் கல்லூரியில் தன்னுடன் படிக்கும், ஒரு பெண்ணை, காதலித்து வந்துள்ளார், இதனை அறிந்த அந்த மாணவி இவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார், இதனால் காதலி தன்னுடன் பேசாததை நினைத்து, மன விரக்தியில், நேற்று கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார், இதனை தொடர்ந்து இது குறித்து திருமுருகன் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :