மலைவாழ் மக்களுக்கு இலவச மின் இணைப்பு
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வால்பாறை எம்எல்ஏ டி. கே. அமுல் கந்தசாமி (அதிமுக) பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதிலும் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாயக் கிணறுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘‘முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முன்னுரிமை கொடுத்து, ஒரே ஆண்டாக காத்திருக்கும் முன்னுரிமை பெற்ற அந்த விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.கடந்த ஆண்டே முழுவதுமாக அந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி சாதனை படைத்திருக்கிறது. யாரேனும் முன்னுரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தால் அரசு அதில் கவனம் செலுத்தும்.கடந்த ஆண்டு மட்டும் முதல்வர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 23 கோடி அரசினுடைய நிதி கொடுத்து, அதில் பயன்பெறுவதற்கான வழி உருவாக்கி தந்திருக்கிறார்.
Tags :