அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதிமுகவின் தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதிய உறுப்பினர் சேர்க்கை காணபடிவத்தைவழங்கி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் உறுப்பினர் சேர்க்கை காண அட்டைகளை அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், தங்கமணி ,வேலுமணி, ஓ எஸ் மணியன் உள்ளிட்டோருக்கு வழங்கினார் அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு புதிய உறுப்பினர்களாக ஒரு கோடிக்கு மேல் சேர்க்க வேண்டும் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டு இருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது அதிமுகவினுடைய புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்
Tags :