போலி காணொளி.. பிரபல யூடியூபர் கைது
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் என்பவர் சினிமா படப்பிடிப்பு போல் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி அதில் சிலரை நடிக்க வைத்து தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகளைப் படம் பிடித்து பரப்பியது தெரிய வந்தது. இந்நிலையில், போலி காணொளிகளை பரப்பிய பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் என்பவரை மதுரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பீகார் தொழிலாளர்கள் பற்றிய வதந்தி வீடியோ தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக, மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Tags :