டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் - அறிவிப்பு ரத்து

by Staff / 08-04-2023 02:15:36pm
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் - அறிவிப்பு ரத்து

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தின் அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பகுதிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் எனக்கோரி கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via