பிரதமர் மோடியை கண்டித்து கருப்பு கொடியுடன் வந்த  முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்  கைது

by Editor / 28-02-2024 09:37:54am
பிரதமர் மோடியை கண்டித்து கருப்பு கொடியுடன் வந்த  முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்  கைது

நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார் முன்னதாக தூத்துக்குடியில் நடைபெறும் அரசியல் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை பொதுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார் இதை ஒட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நெல்லை மாவட்டம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் அக்கட்சியினர் கையில் கருப்பு கோடி ஏந்தியபடி  பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை நோக்கி ஊர்வலமாக சென்றனர் அப்போது அவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலன்களையும் பறக்க விட்டனர் தொடர்ந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை முன்பு கையில் கருப்பு கொடியுடன் ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர் தொடர்ந்து பொதுக்கூட்டம் மேடை நோக்கி செல்ல முயன்ற போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உட்பட சுமார் 20 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.

 

Tags : பிரதமர் மோடியை கண்டித்து கருப்பு கொடியுடன் வந்த  முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்  கைது

Share via