ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் பலி
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள பாரமவுண்ட் காலனியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ரசாக் (16), ரிஸ்வான் (18), அனஸ் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரசாக் முதலில் தொட்டிக்குள் இறங்கியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ரசாக்கை காப்பாற்ற சென்ற சகோதரர் ரிஸ்வான் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இருவரையும் காப்பாற்ற சென்ற அனசும் உயிரிழந்தார். இந்த பரிதாப சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :